என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆலப்புழா விபத்து"
திருவனந்தபுரம்:
ஆலப்புழாவை அடுத்த அம்பலபுழா பகுதியில் இன்று அதிகாலை ஒரு லாரியும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
அங்கமாலியில் இருந்து கொட்டியம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்தது. அந்த வழியாக சென்றவர்கள் விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.
அப்போது காரில் இருந்த பெண் உள்பட 3 பேர் பலியானது தெரிய வந்தது. இன்னொருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
விபத்து பற்றி தெரிய வந்ததும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது விபத்தில் சிக்கிய காரில் வந்தவர்கள் போலீசார் என தெரிய வந்தது. ஒரு வழக்கு விசாரணைக்காக கொட்டியம் போலீஸ் நிலையம் பெண் போலீஸ் அதிகாரி ஸ்ரீகலா (வயது 30) மற்றும் போலீஸ்காரர் நிசார் (42) ஆகியோரும் ஹசீனா (30) என்ற பெண்ணும் காரில் இருந்துள்ளனர்.
காரை டிரைவர் நவ்பால் ஓட்டி உள்ளார். லாரி மீது கார் மோதியதில் பெண் போலீஸ் ஸ்ரீகலா, டிரைவர் நவ்பால் மற்றும் ஹசீனா ஆகிய மூவரும் இறந்து விட்டனர். நிசார் மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்