search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆலப்புழா விபத்து"

    ஆலப்புழா அருகே விபத்தில் பெண் போலீஸ் உள்பட 3 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accidentcase

    திருவனந்தபுரம்:

    ஆலப்புழாவை அடுத்த அம்பலபுழா பகுதியில் இன்று அதிகாலை ஒரு லாரியும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

    அங்கமாலியில் இருந்து கொட்டியம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்தது. அந்த வழியாக சென்றவர்கள் விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.

    அப்போது காரில் இருந்த பெண் உள்பட 3 பேர் பலியானது தெரிய வந்தது. இன்னொருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    விபத்து பற்றி தெரிய வந்ததும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது விபத்தில் சிக்கிய காரில் வந்தவர்கள் போலீசார் என தெரிய வந்தது. ஒரு வழக்கு விசாரணைக்காக கொட்டியம் போலீஸ் நிலையம் பெண் போலீஸ் அதிகாரி ஸ்ரீகலா (வயது 30) மற்றும் போலீஸ்காரர் நிசார் (42) ஆகியோரும் ஹசீனா (30) என்ற பெண்ணும் காரில் இருந்துள்ளனர்.

    காரை டிரைவர் நவ்பால் ஓட்டி உள்ளார். லாரி மீது கார் மோதியதில் பெண் போலீஸ் ஸ்ரீகலா, டிரைவர் நவ்பால் மற்றும் ஹசீனா ஆகிய மூவரும் இறந்து விட்டனர். நிசார் மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    ×